Tuesday, May 23, 2006

என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகள் - 1

மின்சாரக் கனவு படம் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதில் பிரபுதேவா செய்தது சரியா தவறா? கஜோல் அரவிந்த் சாமி தன் மீது காதல் கொண்டிருக்கலாம் என்று தெரிந்திருந்தும் பிரபுதேவா மேல் காதல் கொண்டால் அது சரியா தவறா?

என்னடா தன்னை சுற்றி நடந்த காதல் பற்றி சொல்கிறான் என்று சொல்லிவிட்டு மின்சாரக் கனவு பற்றி பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறீர்களா?

இந்தப் கதையின் முடிவில் இதே போன்ற கேள்விகளை உங்கள் முன் வைக்கப் போகிறேன். அதற்க்கு நீங்கள் எனக்கு உங்களுடைய உண்மையான பதில்களை கொடுக்க வேண்டும்.

சரி கதைக்கும் செல்வோம்.

இந்தக் கதையின் நாயகன் ஆரன் என்று வைத்துக் கொள்வோம்( உண்மையான பெயர் வேண்டாமே ). ஆரன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவன். படிப்பில் படு கெட்டிக்காரன். பெண்களிடம் பேச வேண்டும் என்று ஆசை உண்டு ஆனால் அவனுடைய கூச்ச சுபாவம் அதற்கு தடை. இந்தக் கதை நடக்கும் முன்பே ஒரு பெண்ணைக் ஒரு தலையாக காதலித்து கடைசி வரை சொல்லாததால் அவளுடைய கல்யாணத்திற்க்கு நண்பர்களுடன் சென்று பரிசளித்து திரும்பி வந்தவன். பையன் சுமாராக இருப்பான்.

கதையின் நாயகி ராதை. தமிழ்ப் பெண். ஆரனுக்கு நேர் எதிர் அனைத்திலும். யாருடனும் எளிதில் கலகலப்பாக பழகி விடக் கூடியவள். ஒரு தரம் ஒரு நண்பன் விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் பெண்ணிடம் பேசி கொண்டிருக்கிறோம் என்று யோசிக்காமல் f@#* you என்று சொல்லிவிட திருப்பி f@#* you என்று( விளையாட்டாகதான் ) என்று சொல்லி அதிரச் செய்தவள். நல்ல அழகி.

இந்தக் கதையின் இரண்டாம் நாயகன் குமார். பீகாரைச் சேர்ந்தவன். நல்ல கலகலப்பாக பழகக் கூடியவன். பெண், ஆண் என்று வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் நன்றாக பழகக் கூடியவன். பையன் வட நாடு என்பதால் நன்றாவே இருப்பான்.

கதை நடந்தது ஒரு கல்லூரியில். அந்தக் கல்லூரி வழக்கம் என்னவென்றால் பெண்கள் அனைவருக்கும் ஆண் ஒருவன் நண்பனாக இருக்க வேண்டும். பெண்கள் ஷாப்பிங் செல்லும் சமயம், சினிமாவிற்க்கு போகும் சமயம், வெளியில் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த ஆண் பாதுகாவலர் போல கூட சென்று திரும்பி வர வேண்டும். அந்த ஆணின் உறவிற்கு ஆரம்பத்தில் கிடைக்கும் பெயர் நண்பன். இந்த நண்பன் என்ற உறவு காதல் வரை பல சமயம் சென்று முடிவதும் உண்டு.

இந்தக் கதையில் நம் நாயகி ராதைக்கும் ஒரு நண்பன் தேவையாய் இருந்தது. அந்த நண்பன் நம் குமார். ராதை வெளியில் செல்லும் சமயம் எல்லாம் குமார்தான் பாதுகாவலர். வெளியில் சென்று உணவு உண்பது, படம் செல்வது ஷாப்பிங் போவது என்று இவர்களுடைய உறவு சுமூகமாக 1 1/2 ஆண்டுகள் நீடித்தது.

இந்தச் சமயத்தில் குமாருக்கு ராதை மேல் காதல் உண்டாயிற்று. ஆனால் அதனை ராதையிடம் தெரிவிக்கவில்லை. ஏனெனில் ராதையின் பெற்றோர் காதல் கல்யாணம் என்றால் தவறு என்று நினைக்கும் வகை. இந்த விசயம் கல்லூரியில் உள்ள அனைவருக்கும் கிட்டத்தட்ட தெரியும். கல்லூரியில் உள்ள அனைவருக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா? அவளுக்கு வந்த காதல் கடிதங்களுக்கு அனைத்திற்க்குமே இதே பதில் சொல்லி சொல்லி அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது.

1 1/2 வருடங்கள் கழித்து அந்த கல்லூரியின் விழா ஒன்று வந்தது. விழா நடத்த வெளியில் சென்று ஸ்பான்சர்ஷிப்(தமிழில் என்ன வார்த்தை என்று தெரிந்தால் கூறுங்கள்) பிடிக்க வேண்டும். ஸ்பான்சர்ஷிப் பிடிப்பது கல்லூரியின் விடுமுறை நாட்களில் நடைபெறும். பொதுவாக பெண்கள் சென்று ஸ்பான்சர்ஷிப் பிடிப்பதுதான் வழக்கம்(பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்). நம் நாயகியின் கலகலப்பான பேச்சும் அழகும் இந்த வேளைக்கு ஏற்ற ஆளாக அமைந்து விட்டது.

இந்த மாதிரி செல்லும் பெண்களுடன் நம் பாதுகாவலர்கள் உடன் செல்வது வழக்கம். ஆனால் நம் குமாரோ பீகாரில் இருந்து வந்திருப்பதால் விடுமுறை கிடைக்கும் சமயம் மட்டுமே ஊருக்கு செல்ல முடியும் ஆகவே ஊருக்கு சென்று விட்டான்.

இது போன்ற சமயங்களில் நம் பெண்களுக்கு இரண்டாம் பாதுகாவலர்களாக சிலர் சில நாள் செயல் படுவார்கள். முதல் பாதுகாவலர்கள் வரும் வரை எல்லா விசயங்களுக்கும் துணையாக இருப்பார்கள் பின் விலகி சென்றுவிடுவார்கள்.

அப்படிப்பட்ட ஒருவனை கூட்டிக் கொண்டுதான் அந்த முக்கியமான நாளில் நம் நாயகி ஸ்பான்சர்ஷிப் பிடிக்கச் சென்றால். அப்படி செல்லும் சமயம் அந்த இரண்டாம் பாதுகாவலர் நம் நாயகன் ஆரனை துணைக்கு அழைத்ததுதான் இந்தக் கதையின் திருப்புமுனை( பொதுவாக 2 - 3 ஆண்கள் ஒரு பெண் என்றுதான் ஸ்பான்சர்ஷிப் பிடிக்கச் செலவது வழக்கம் ). அது வரை 1 1/2 வருடங்களில் நம் நாயகியும் நாயகனும் ஒரு முறை கூட பேசியது கிடையாது. நம் நாயகன் நாயகியை விடுங்கள் எந்தப் பெண்ணிடமும் பேசியது கிடையாது.

ஸ்பான்சர்ஷிப் பிடிக்க பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் சமயம் இரண்டு சீட் மட்டும் கிடைக்க(தனிதனியாக) நம் நாயகியும் இரண்டாம் பாதுகாவலரும் உட்கார்ந்து கொண்டார்கள். நம் நாயகி பக்கத்தில் சீட் காலியானதுதான் நான் இந்தக் கதையை உங்களுக்கு சொல்ல காரணமாக அமைந்தது. சீட் காலியானதைக் கண்ட நாயகி நம் நாயகனை அருகில் அமர அழைத்தாள். நாயகனுக்கோ கூச்சத்தில் நம் இரண்டாம் பாதுகாவலரை சென்று நாயகி அருகில் அமரச் சொல்லி தனக்கு அவனுடைய சீட் கொடுக்கச் சொல்ல, நாயகி இரண்டாம் பாதுகாவலரும் வற்புறுத்த நாயகி அருகில் சென்று நம் நாயகன் அமர்ந்தார்.

கம்பர் 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கிலாள்' என்று கூறுகிறார். இந்த இரண்டு வரியைப் படித்ததுமே சரி காதல் உண்டாயிடுச்சு என்று நாம் அறிகிறோம். இன்னைக்கும் 'ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் சிறு புன்னகையால் என்னை கறைய வைத்தாய்' வரிகள் இருக்கு. இப்படி பார்வையிலேயே காதல் ஜுரம் கொள்ளச் செய்யும் காதல் 1 மணி நேரப் பயணத்தில் ஜன்னியே வரச் செய்துவிடாதா?

அப்படித்தான் ஆனது நம் நாயகனுக்கு. நம் நாயகி பையன் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவனா இருக்கானே அதனாலே நல்லா பேசுவோம் அப்பதான் கூச்ச சுபாவம் போகும் என்றுதான் பேசினாலே தவிர காதல் எல்லாம் இல்லை அந்த சமயத்தில்.

பின் என்ன ஆயிற்று நாயகிக்கு நாயகன் மேல் எப்படி காதல் வந்த்து? குமார் நிலைமை என்ன என் கேள்விகள் என்ன என்பதை எல்லாம் அடுத்த பதிவில் சொல்கிறேன்

5 comments:

said...

sollungaappu... enna nipateenga...

said...

அமராவதி காதல் கதைக்கு போட்டியா?

படிக்க சுகமாத்தான் இருக்கு.

ஆரன் அல்லது குமார் இருவரில் நீங்கள் யார்?

said...

ரவீந்திரன் வேலை இருந்தால் நிறுத்தி விட்டேன் நாளை கண்டிப்பாக முடிக்கிறேன்.

தயா என்னோட கதை இல்லீங்க இது என் கதை தனியா எழுதுறேன் இது நண்பனின் கதை. எப்படி இவ்வளவு விசயம் தெரியும்னு கேக்கறீங்களா? என்னோட அறிமுகப் பதிவை படியுங்கள்.

said...

எங்கும் காதல் எதிலும் காதல்... அதுதானே உலகை இயக்குவது!! தொடர்ச்சியை எழுதுங்கள்..

-குப்புசாமி செல்லமுத்து

said...

வந்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி