Monday, May 29, 2006

என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகள் - 1(இரண்டாம் பாகம்)

நான் இந்தக் கதையை ஆரனுக்கு ராதை மேல் காதல் வந்ததுடன் நிறுத்தி இருந்தேன். அந்த சமயத்தில் ராதைக்கு ஆரன் மீது காதல் கிடையாது என்பதையும் ஆரனைவிட ராதைக்கு முதல் பாதுகாவலரான குமார் மீதுதான் அதிக நட்பு எனபதையும், குமாருக்கும் ராதை மேல் காதல் ஆனால் ராதை பல காதல்களை தன் குடும்ப சூழ்நிலை காரணமாக நிராகரித்து விட்டாள் நம் நாயகி எனபதையும் இங்கு உங்களுக்கு நியாபப் படுத்தி இருக்கிறேன். இதனின் முதல் பாகத்தை இங்கு காணலாம்.

என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகள் - 1

ஆக ஸ்பான்ஸர்ஷிப் பிடிக்கப் போன ஆரனின் கூச்ச சுபாவம் கண்டு அவனிடம் நன்றாக பேசியதைக் கண்டு நம் நாயகன் ஆரனுக்கு நாயகி மேல் காதல் உண்டாயிற்று. ஆனால் நாயகிக்கு அது போன்ற எண்ணங்கள் இல்லை. இது போக குமார் 1 மாத விடுமுறையில் இருந்து திரும்பி வந்தால் ராதை ஆரனுடன் பழகுவது குறைந்து விடும். எனவே ஆரனுக்கு தான் இந்த ஒரு மாதம் மட்டுமே நேரம் அதற்குள் ராதையின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

இங்கு நான் இங்கு சொல்லிக் கொண்டிருப்பது உண்மை கதை என்பதை ஞாபகப் படுத்தி கொள்கிறேன்.

ஆரனுக்கு எங்கிருந்து யோசனை தோன்றியது என்று எனக்கு தெரியவில்லை.

அவனுடைய யோசனைப்படி அவன் முதலில் ராதையிடம் தன் மீது இரக்கம் உண்டு பண்ண எண்ணிணான். பெண்களிடம் இரக்கம் வர மிக சுலபமான வழியைதான் பல சினிமாக்கள் நமக்கு தருகிறதே. அதில் ஒன்றான காதல் தோல்வியை துணைக்கு அழைத்துக் கொண்டான் நம் நாயகன்.

அதன் படி தான் முன்னால் ஒரு தலையாக காதலித்து, கூச்ச சுபாவத்தால் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டு விட்ட முன்னால் காதலை மசாலா போட்டு ஒரு கதையாக உருவாக்கினான்.

அந்தக் கதையின்படி ஒரு வார்த்தை கூட பேசாத முன்னாள் காதலி தன்னை உருகி உருகி காதலித்ததாகவும், பெற்றோர் வற்புறுத்தலினாலேயே அவனை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினான்.

இப்படிச் சொன்னால் மட்டும் போதாது என்பதை உணர்ந்த ஆரன் தன் முன்னாள் காதலி இன்னும் தன்னைக் காதலிப்பதாகவும் தனக்காக இன்னும் தன்னுடம் மின்னஞ்சல் தொடர்பு வைத்திருப்பதாகவும், காதல் தோல்வியால் இவன் துவண்டுவிடக் கூடாது என்பதால் தினமும் இவனுடன் தொடர்பு கொண்டு அவனை ஊக்குவிப்பதாகவும் கதைகள் கட்ட ஆரம்பித்தான்.

இந்தக் கதைகளை நம்ப வைப்பதற்க்காக போலியான ஒரு மின்னஞ்சலையும் உண்டு பண்ணி அதில் இருந்து மின்னஞ்சல்களை அனுப்பத் தொடங்கினான். இதற்கு சில நண்பர்களும் துணையாக இருந்தார்கள்.

இப்படி படிப்படியாக இரக்கம் உண்டாக்கிய பின் தன்னுடைய திட்டத்தின் அடுத்த கட்டத்தை தொடங்கினான்.

அதன்படி தன் முன்னாள் காதலியிடம் இருந்து மின்னஞ்சல்கள் சரியாக வரவில்லை என்று ராதையிடம் புலம்ப ஆரம்பித்தான். இதற்குள் ராதைக்கும் அவன் மீது ஒரு இரக்கம் உருவாகி இருந்தது.

ஆரனும் தனக்கு வருவதாகக் கூறிய அனைத்துக் கடிதங்களையும் ராதையிடம் காண்பித்ததால் அவளும் கடிதங்கள் சரியாக வருவதில்லை என்று உணர்ந்தாள். ராதை ஆரனின் கதையை முழுமையாக நம்பி இருந்ததால் ஆரன் கடிதம் வருவது நின்று விட்டால் அவன் மனம் உடைந்து போய் விடுவான் என்று எண்ணி அவனை வேறு திசையில் திருப்புவதாக நினைத்து அவனிடம் தனக்கு தானே கொண்டிருந்த அளவுகோள்களை மீறி நெருங்கி பழக ஆரம்பித்தாள் நம் நாயகி.

இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டான் நம் நாயகன்.

இந்த நாடகம் நடந்து கொண்டுருக்கும் சமயத்திலேயே நம் குமாரும் விடுமுறை முடிந்து திரும்பி வந்தான். அவன் வந்த சில நாட்களிலேயே ராதை முன் போல் தன்னுடன் பழகுவதில்லை என்பதை உணர்ந்தான் இதனைப் பற்றி ராதையிடம் பேசலாம் என்றால் அதற்குள் கல்லூரி விழா வேறு வந்து அனைவரும் தங்களுடைய பணிகளில் அனைவரும் கவனல் செலுத்த வேண்டியதாகிவிட்டது. இதில் நம் நாயகன் ஆரனுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமைந்தது. ராதையும், ஆரனும் ஒரு குழுவிலும் குமார் வேறு குழுவிலும் இருந்தார்கள்(கல்லூரி விழாக்களில் பல குழுக்கள் உண்டு உணவுக் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சிக் குழு போன்றவை). இப்படி சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைந்ததால் ராதையும் ஆரனும் மிக நெருக்காமானார்கள்.

இந்த நெருக்கத்திற்கு அப்பொழுதிருந்த ஏர்செல் நிருவனமும் துணை புரிந்தது. 11 - 6 செல் போன்கள் இலவசம் என்ற திட்டம் இவர்களுடைய நெருக்கத்திற்கு மிகவும் துணை புரிந்தது.

ஆகவே தன் யோசனையின் கடைசி கட்டத்தை நெருங்கினான் ஆரன். காதலை சொல்வதுதான் அந்தத் திட்டம். காதலை ஆரன் சொல்ல எடுத்த முறைதான் இந்தக் கதையிலேயே மிகவும் சுவாரஸ்யமான பகுதி. ஒரு நாள் ராதையை அவசரமாக வரச் சொன்ன ஆரன் தனக்கு தன் முன்னாள் காதலி அனுப்பியதாக இருந்த ஒரு மின்னஞ்சலைக் காண்பித்தான்.

அந்த மின்னஞ்சலில் தன் முன்னாள் காதலி ஆரனிடம் தான் இப்பொழுது திருமணம் புரிந்து விட்டதால் தன்னுடைய கடமைகள் உள்ளதாகவும், ராதை மிக நல்ல பெண்ணாக உள்ளதால் அவளை ஏன் ஆரன் காதலிக்க கூடாது என்பது போல் எழுதியிருந்தது. இதைக் கண்டு ஆரன் மிக மிக உணர்ச்சிவசப் படுவது போல்(அவனேதான் எழுதி இருந்தாலும்) நடிக்க ஆரம்பித்தான். ராதை இந்த மின்னஞ்சலைக் கண்டு மிகவும் குழம்பிவிட்டாள். நம் நாயகி சில நாட்களாக ஆரனுடன் மிக நெருங்கி பழகி இருந்தாலும் காதல் கொண்டிருக்கிறாளா என்று அவளுக்கு புரியவில்லை.

ஆகவே அடுத்த நாள் சந்தித்த இருவரும் சில நாட்கள் பேசாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்தார்கள்.

தன்னுடைய யோசனை மிகவும் நன்றாக வேலை செய்ததைக் கண்ட ஆரன், அவர்கள் அப்படி முடிவு செய்த இரண்டு நாட்கள் கழித்து ராதைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டான். தொடர்பு கொண்டு தான் இரண்டு நாட்கள் அவளைக் காணாமல் தவித்து போயிருப்பதாக கூறினான், ராதை நிலைமையும் அது போலத்தான் என்பதையும் உணர்ந்து கொண்டான். ஆகவே இருவரும் மீண்டும் சந்திப்பதாக முடிவு செய்தனர்.

மீண்டும் சந்திக்கும் சமயம் ராதை இன்னும் குழப்பத்தில் இருப்பதை அறிந்த ஆரன், தான் மிகவும் யோசித்ததாகவும் யோசித்த பிறகு தான் ராதையை காதலிப்பதாக உணர்ந்தாகவும் கூறினான்.

ராதை இதனை கேட்டு மிகவும் குழப்பம் அடைந்தாள். அவள் ஆரனுடன் நெருங்கி பழகி இருந்தாலும் அவள் இன்னும் அவனை காதலிக்கிறாளா என்று முடிவு செய்ய முடியவில்லை. அவள் அப்பாவும் காதல் என்றாலே வெறுக்கிற டைப் என்பதால் தான் முடிவு எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி பிரிந்தார்கள். கிளைமாக்ஸ் நெருங்கி விட்டதை உணர்ந்த ஆரன் கடைசியாக் செய்த காரியம் சினிமா தோற்த்தது போங்கள் என்று சொல்ல வைத்து விடும்.

தன்னுடைய கையை கிழித்துக் கொண்ட ஆரன் ராதைக்கு அது தெரியுப் படுத்தினான்( நண்பர்கள் எதற்கு ) உடனே அதிர்ந்து போன ராதை உடனே தன்னை சந்திக்குமாறு கூறினாள். அந்த சந்திப்பில் இருவரும் பேசினார்கள் பேசினார்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள்.

எவ்வளவு பேசினாலும் குழப்பமாகவே இருப்பதைக் கண்ட ஆரன், கடைசியில் பளீர்ர்ர் என்று ஒரு அறை விட்டு நீ என்னைக் காதலிக்கிறாயா இல்லியா என்று கேட்டான். அதிர்ந்து போன ராதை அழுது கொண்டே ஆமாம் என்று கூறினாள்.

இதன் பிறகு என்ன நடந்தது கல்லூரி முடியும் வரைக் காதலித்த ஆரனும் ராதையும், கல்லூரி முடிந்தவுடன் ஆரனின் மற்றொரு திட்டத்தால் ராதையின் பெற்றோர் சம்மதம் வாங்கி கல்யாணம் செய்து கொண்டு இன்று மகிழ்ச்சியாக உள்ளார்கள். சுபம் என்று சொல்லி விடலாம் ஆனால் குமார் நிலைமை என்ன ஆயிற்று என்பதையும் காண வேண்டும் அல்லவா?

குமாரின் நிலைமையை சொல்லும் சமயத்தில் நான் இங்கு சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

All is fair in love and war.

என்று சொல்கிறார்களே இது சரியா?

குமார்தான் முதலில் இருந்தே ராதையைக் காதலித்தான். ஆரன் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ராதையும் குமாரும் கூட சேர்ந்திருப்பார்கள்.

1 மாதம் விடுமுறையில் சென்றதைத் தவிர வேறு ஒரு தவறும் குமார் செய்யவில்லை.

அவன் ராதை ஆரனின் காதலை தாங்க முடியாமல் சில காலம் குடிகாரனாக மாறிவிட்டான்.

பின் நண்பர்களின் அறிவுரைகளின் பெயரில் திருந்தி இன்று நல்ல வேலையில் உள்ளான்.

சீக்கிரம் திருமணமும் புரியப் போவதாக கேள்விப் பட்டேன்.

ஆனாலும் என் மனதில் ஆரன் செய்த்தது சரியா ? ராதை செய்த்தது சரியா? குமார் என்ன தவறு செய்தான் என்ற கேள்விகள் உண்டு. அதே கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

4 comments:

said...

கதயச் சொல்லிப்புட்டு கேள்வி கேட்டா நாங்க பதில் சொல்லிருவோமா? ;-)

said...

குப்புசாமி சார் வருகைக்கு நன்றி...

இது எனக்குள் உள்ள கேள்விகள் யாரேனும் விடை கொடுத்தால் பரவாயில்லை...

said...

வணக்கம் செந்தில்குமர நண்பரே !
உங்களை சுற்றி நடந்த காதல்கதைகளைப் படித்து பார்த்தேன், அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது..அதில் ஆரன் செய்தது சரியா ? -அவர் செய்தது தவறு தானே.ஆனால் நாம் அனைவருமே ஏதோ ஒருவகையில்
மறைமுகமாக சுயநல புழுக்கள் தானே...ஒருவகையில் ஆண்டவனுக்கே இது குழப்ப விளையாட்டாக கூட இருக்கலாம் ..
ஆதங்கத்துடன்,
M.Rajesh

said...

வணக்கம் செந்தில்குமர நண்பரே !
உங்களை சுற்றி நடந்த காதல்கதைகளைப் படித்து பார்த்தேன், அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது..அதில் ஆரன் செய்தது சரியா ? -அவர் செய்தது தவறு தானே.ஆனால் நாம் அனைவருமே ஏதோ ஒருவகையில்
மறைமுகமாக சுயநல புழுக்கள் தானே...ஒருவகையில் ஆண்டவனுக்கே இது குழப்ப விளையாட்டாக கூட இருக்கலாம் ..
ஆதங்கத்துடன்,
M.Rajesh