Wednesday, May 24, 2006

மதுமிதாவின் பதிவிற்க்காக

வலைப்பதிவர் பெயர்:
செந்தில் குமரன்

வலைப்பூ பெயர் :
கவிதைகளும் கருத்துக்களும்
பார்த்ததில் படித்ததில் ரசித்தது.
என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகள்

உர்ல் :
http://kathalregai.blogspot.com/
http://rasithathu.blogspot.com/
http://kathalenpaarvaiyil.blogspot.com

ஊர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்

நாடு:
யாதும் ஊரே யாவரும் கேளிர்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
திருமா என்ற நண்பர் தமிழ்மணம் பற்றி அறிமுகம் செய்து வலைப்பதிவு ஆரம்பிக்க உதவினார்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
ஜூலை 2005

இப்பதிவின் உர்ல் / சுட்டி :
http://kathalenpaarvaiyil.blogspot.com/2006/05/blog-post_24.html

இது எத்தனையாவது பதிவு:
41வது பதிவு

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
எழுதும் ஆசை உண்டு நண்பர் திருமா நன்றாக எழுதுகிறாய் வலைபதிவு ஆரம்பி என்று ஊக்குவித்ததால் ஆரம்பித்தது.

சந்தித்த அனுபவங்கள்:
இனிமையான அனுபவங்கள் - கைப்புள்ள, குமரன், என்னார், பொன்ஸ், தேவ், ஜொள்ளுப் பாண்டி, செந்தழல் ரவி, கவிதா போன்றவர்களின் பதிவுகளை படிக்கும் சமயம் கிடைத்தது. உடனே தோன்றிய சில பெயர்கள் இவை. மேலும் பலருடைய பதிவுகள் அற்புதமாக உள்ளது. இவர்கள் அனைவரின் பதிவுகளை படிக்க கிடைத்ததுதான் இனிமையான அனுபவம்.இந்த சந்தர்ப்பத்தை நான் நன்றாக எழுதிகிறீர்கள் என்று எழுத நினைத்த பல பின்னூட்டங்களுக்கு பதிலாக எடுத்துக் கொண்டு அவர்களைப் பாராட்டுகிறேன்.
கசப்பான அனுபவங்கள் - ஜாதி மதம் வெறி கொண்டு அழையும் பல மனிதர்களை சந்தித்தது ஒரு அனுபவம். அவர்களை எதிர்க்கிறோம் என்று வக்கிர புத்தி கொண்டு வலைப் பதிவை கேவலமாக பயன்படுத்தும் மன நிலை சரி இல்லாதர்வர்களை சந்தித்தது மற்றொரு அனுபவம்.

பெற்ற நண்பர்கள்:

அப்ப அப்ப மட்டும் எழுதுவதாலும் நான் எழுதும் கருத்துக்கள் யாருடனும் ஒத்து போகாதாதாலும்( மட்டமா எழுதுறேன்கிறதை பாலிஷ்டா சொல்லி இருக்கேன் ) நண்பர்கள் அதிகம் வலைப் பூக்களில் இல்லை.

கற்றவை:
பல விசயங்கள், மலைத்தது இங்குள்ள ஆற்றலைக் கண்டு. இங்குள்ள பல வலை பதிவர்கள் சினிமாவில் வருவதை விட நன்றாக நகைச்சுவை உணர்வுடன் எழுதுகிறார்கள். பலருடைய எழுத்துகள் என்னை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
200% யாரை பற்றியும் கவலை இல்லாமல் எழுதுவது போல ஒரு அற்புதமான விசயம் கிடையாது.

இனி செய்ய நினைப்பவை:
எழுத வேண்டும் இப்பொழுது எழுதுவதைவிட நன்றாக எழுத வேண்டும். உலகை மாற்றி மனித நேயம் வளரச் செய்ய வேண்டும்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
சூப்பர் ஹீரோவாக விரும்பும் ஒரு சராசரி மனிதன்

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தமிழ்மணம், தேன்கூடு போன்ற சீரிய முயற்சிகளை மேற் கொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள். மனித நேயம் வளர அனைவரும் பாடுபட வேண்டும். ஜாதி, மதம் போன்ற வேற்றுமைகள் ஒழிய வேண்டும்.

1 comments:

said...

நன்றி செந்தில்குமரன்

இந்தப்பதிவின் சுட்டியையும் சேர்த்துவிடுங்களேன்